Sunday, May 1, 2011

சொல்லிவிட்டுபோனால்.......




இன்றாவது வா
என்னுடன் ஏமாற்றியது போதும்...


அந்த இளங்காற்று வீசும்
கடற்கரைக்கு போய் வரலாம் என்றேன்....

இங்கேயே நில்
வந்துவிடுகிறேன் என்றாய்...


வருடங்கள் போயின
வயோதிகனாகிவிட்டேன் நான்...


உன்னை சோதனை செய்வேன்
என்று சொல்லியிருந்தாய்...


ஒரு தருணத்தில்


சோர்ந்து போய்விடவில்லை
சோகமும் என்னை சூழ்ந்து விடவில்லை

காத்திருக்கிறேன் உனக்காக
கரையோடு அடித்து செல்லும்
நுரைபோல...