Thursday, December 30, 2010

விம்மல்....



விடை கொடு
என்னை
விலைக்கு வாங்கிய
நாடே....

விம்மல்
தனியாமல்
என் வின்மின்
காத்திருப்பாள்
வழியேல்லாம்
விழிவைத்து...

விடைகொடு...

சொல்லமாட்டேன்
அவளிடம்
நி என்னை
கல்லாலடித்து
காசு கொடுத்ததை...

புண்ணாகிவிடும்
அவள் பூ
போன்ற மனது...

இருந்தும் பயம் தான்
எனக்குள்
எங்கே
தூக்கத்தில்
உளரிவிடுவேனோ என்று...

விடை கொடு என்னை
விலைக்கு வாங்கிய நாடே ....

டிஸ்கி:-
கோபம் எல்லாம் ஒன்னும் இல்லை .ஏதோ ஒரு விம்மல் எனக்குள் என்னவளின் நினைப்பாள்.விடுமுறையில் நான் வீட்டிற்க்கு போகபோறேன் இன்று....

அனைவருக்கும்
இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்...........







Thursday, December 23, 2010

சொன்னா புரியுதா...



நிலவை

நூலில் கட்டி

நான் நீண்டதூரம்

இழுத்து போனதுண்டு...



மூச்சு வாங்கி

நிற்க்கும்போது முறைத்தது்

அந்த முழு மதி என்னை

ஏழனமாய் பார்த்து..

இப்படி சொல்லி....


நான்

சுற்றிக்கொண்டே

நிற்கிரேன்...


நி நிற்க்கும்

இடத்தை விட்டு சுற்றுகிராய்யென்று...

நான் உன்னுடன்

சுற்றி திரிவது ஒரு வேலை

அந்த நிலவுக்கு தெரிந்திரிக்குமோ....

அதனால் இப்படி சொல்லியிருக்குமோ....

யோசிக்கிரேன்.....



டிஸ்கி்:- ஊரை சுத்தாத யாரவது பார்த்த பஞ்சயத்தாயிடும் சொன்னா யாரு கேக்குரா...ம்ம்ம் மாட்டிக்கிட்டா இப்படித்தான்.... எல்லாரும் யோசிக்கனும் புரியுதா






Friday, December 17, 2010

இலைகள் துளிர்விடும் தருனம்.........














இந்த விருதை தோழிகள் அன்புடன் ஆனந்தி , நீரோடை மலிக்கா, மற்றும் வெட்டிபேச்சு சித்ராவிற்கும் அளிக்கிறேன் வந்து பெற்றுக்கொள்ளவும்









மழை




வான் தாய்
அழுகையில்
பூமித்தாயின் சிரிப்பு....



நான்


விடை தெரியா
என் வினாதாளில்
இதுவும் கேள்வி.....




நினைப்பு


அலைகள்
அடித்து சென்ற நம்
கால்தடங்கள்
இன்னும்
அலையாய்
உன் நினைப்பு
அலை
ஓயாமல்... தடங்களாய்.......







டிஸ்கி-1
இலைகள் துளிவிடுமா என்ன !!!! லேசாக அதாங்க நட்டு லுசானமாதிரின்னு சொல்லுவாங்களே அப்படி ஆனதால தான் இப்படியேல்லாம் .
டிஸ்கி-2 அலோ விருதுக்கும் டிஸ்கி-1 க்கும் எந்த கனேசனும் இல்ல சரியா...










Tuesday, October 12, 2010

அப்பா....


தங்கமான நினைவுகள்.....
மரக்கிளையில் இழைகள் துளிர்விடும் தருனம்...


வியந்து
பார்க்கிரேன்
உங்களை நான்....


என்
விடியல் பொழுதுகளில்
உங்கள் மார்பினில்...


நான் தூங்கும் வரை
அனைத்திருப்பாள்
அம்மா...


நான் தூங்கிய பின்பும்
உங்கள் மார்பினில்
அனைப்பில் எத்தனை
நாட்கள் கடந்துபோயிருக்கின்றன...


எண்ணியதில்லை
எனக்கு அப்போது
எண்கள்
புலப்படவில்லை....


பால்ய வயதுகளில்
படுக்கையை ஈரமாக்வேனாம்
அம்மா இப்போது
அடிக்கடி சொல்லுவாள்...


நீங்களும்
அப்படித்தானாம்
பாட்டி சொல்லியிருக்கிராள்
அந்த காலத்துல உங்க
அப்பனும் அப்படித்தான் கண்ணு....


பத்து பக்க
ஏடுகளில் பல நூறு முறை
எழுதியிருப்பேன்...

என் அப்பா
இன்று காலை அடித்தார்
அரை மணிநேரத்திர்க்கு
பின்பு அனைத்துக்கொண்டார்....


என் அப்பா
இன்று கோவில் திருவிழாவுக்கு
கூட்டிக்கொண்டுபோனார்
கோவிலை சுற்றி காட்டினார்
என்
பிஞ்சு விரல் பிடித்து
லேசாக சிவந்திருக்குமோ
நினைத்து பார்க்கிரேன்...


எங்க அப்பா
அப்படி இப்படி என்று
கிறுக்கிய ஏடுகளையெல்லாம்
இப்போது
மொழிபெயர்ப்பு செய்கிரேன்...


மொழி தெரியாத
தேசத்தில் முழித்துக்
கொண்டு விழி பிதுங்கி...
மனசு பூரா
நீங்கதான் அப்பா
என்னமோ பன்னுது
அதையேல்லாம் இப்போது
என்னும் போது...


என்ன பன்னிகிட்டு
இருக்கிங்க இப்போ
புரையேரியிருக்கும
உங்களுக்கு
நான் நினைத்ததாலோ
என்னவோ....


என் அன்பின் முத்தங்கள் உங்களுக்கு அப்பா......ச்ச்ச்





டிஸ்கி:- பாச தாகங்கள் பஞ்சமான இந்த பலைவனத்தில் என் பஞ்சனையில் ஏதோ கனம் கானோம்.

என் தலையனை சலவைக்கு போனதால்தான் இந்த வசந்தகால வரிகள்







Friday, October 8, 2010

அவ்வளவுதான் வாழ்க்கை........

காசா.......(மனசு)


உறவுகள்
ஒரு கோடி
என்னைத்தேடி ஊர் கோடியில்...

உறவுகள்
ஏதும்மின்றி ஒத்தையில
நான் போரென்
அரபுநாட்டு தெருவேரமா...

கத்தையா பணம்
பாக்க ஒத்தையில
நான் போரென்
நித்திரை இல்லாம
இந்த சித்திரையில...

கலத்துமேட்டுல
நான் போனா மாப்பிள்ளை
எப்புடியிருக்கிங்க
அப்பா எங்க
அம்மா எங்க
அம்புட்டு பேரும் கேப்பாங்க
அவ்வளவு சுகமா இருக்கும்...

கத்தையா
பணமில்லனாலும்
ஒத்தையில நான் போனா
பத்து பேர் கேப்பான்
ஏய்யா எப்படியிருக்க
அங்கே....

இங்கே
கத்தைய பணமிருக்கு
ஒத்தையில நான் போரேன்
ஒரு பயகூட
என்னான்னு கேக்கல
கேட்டா என் பாசை
அவனுக்கு புரியல....

காசு காசுன்னு
கடலைத்தாண்டி
குடலை காயவச்சி
இந்த காகிதத்தை சேத்துவச்சி
காலம் போனபின்னெ
நான் என்ன கட்டிபிடிச்சி
அழவா.....?
கனக்கு மனசு


டிஸ்கி:-
மனசுதாங்க எல்லாத்துக்கு காரணம் அப்படின்னு சொல்லுவங்க அந்தமனசு கொஞ்சம் கனத்துபோனதாலத்தான் இப்படியெல்லாம்.....












Monday, September 6, 2010

என்ன சொல்ல .....


எனக்கு தேவைதான்...



ஒர் ஆயிரம் தடவை
சொல்லியிருப்பேன்
என் காதலை உனக்கு...


குளியலறை கண்ணாடி
முன்பு ஒரு முறை
உன்னிடத்தில்
சொல்லிட...


கடந்து போயின
காலங்கள்.....


நேற்று
கலட்டிவிட்டாய்
நான் நீண்ட நேரம் குளிப்பதாக
சொல்லி...


இன்னும் கொஞ்சம் காலம்...
டிஸ்கி:- வாழ்க்கையில எல்லாமே அனுபவிச்சாத்தான் தெரியிம் ம்ம்ம்.. அப்படின்னு சொல்லுவாங்க அதான்


Saturday, August 7, 2010

வேலை வேலை-2 தொடர்பதிவு

கேள்விகளுக்கா தட்டுப்பாடு....




நீண்டு கொண்டே செல்லும் இந்த கேள்விகள் இப்போதும் நம்மை விடாபிடியாக பிடித்து கொண்டு ஆட்டுவிக்கின்றன சில சமயங்களில் சரி வாங்க வேலைய பாப்போம்.


மறுபடியும் முதலில் இருந்தே ஆரம்பிப்போம். நான் கேட்கும் கேள்களுக்கு பதில் அதுதான் சொன்னெனே தயாராக வைத்திருப்பாளென்று . இந்த முறை கேள்வியே அதை பற்றித்தான் கேள்வியே.


அம்மா... சொல்லு கண்ணு. பணம் ஏம்மா சம்பாதிக்கனும் ... ?

வழக்கம் போலவே அவள் முதலில் தரும் பதிலை தராமல் . நான் எதிர்பார்க்காதபதிலை தந்தாள். கண்ணு நீ அப்ப அப்ப கேப்பியே... அம்மா எனக்கு அதை வாங்கித்தா இதை வாங்கித்தா என்று கையை நீட்டுவாயே அதற்கேல்லாம் பணம் வேனும். பணம் இல்லையின்னா நம்மளால அதையெல்லாம் வாங்கமுடியாது என்று முதல் பதிலை சொல்லிமுடித்தாள்


அவள் இரண்டாவது பதில் :- அப்பா நேத்து உனக்காக பதிதாக ஒரு scale வாங்கி வந்தாங்க நி ராத்திரி நல்லா தூங்கிட்ட அதனால அப்பா என்கிட்ட கொடுத்துட்டு வேலைக்கு போய்ட்டாங்க. சரி இந்த பத்திரமா வச்சிக்கோ உடைச்சிடாம என்று சொல்லிகொண்டே என் புத்தக பையில் வைத்து விட்டாள்..



டிஸ்கி:- அதே scale ல எங்க அப்பா அடிச்சி சுக்கு சுக்குகாய் உடைந்து போனது எனக்குள் இன்னும் அந்த நினைவுகள் நீங்காமல் இன்று வரை.

இன்னும் ஒரு சிறிய துண்டு என் பெட்டியில் ஞாபக சின்னமாய் ....



தொடரும் கேள்விகள் இன்னும்......வாங்க.....

Wednesday, August 4, 2010

வேலை வேலை-1 தொடர்பதிவு

கேள்விக்கா தட்டுபாடு...




நிறைய கேள்விகள் யாருங்க சொல்லிதராங்க இப்படியேல்லாம் கேக்க சொல்லி. நான் நினைக்கிறேன் எல்லாம் பிறக்கும் போதே பிக்‌ஷ் பன்னிக்கிட்டு பிறப்பாங்களோ? சரி விடுங்க நாம் எடுத்துக்கொண்ட இந்த வேலையாவது ஒழுங்க செய்யலாம்.



இப்போது என் நினைவிற்க்கு வருவது பள்ளிக்கூட நாட்கள் தான். அட பாவி நீ அங்க இருந்தே ஆரம்பிச்சிட்டியா என்பது என் காதுகளுக்கு கேக்குது. ம்ம்ம்ம்..என்ன செய்ய உன்மையை சொன்னா யாரு கேக்குரா.


பள்ளிகூடத்திற்க்கும் வீட்டிற்க்கும் சுமார் 15 நிமிட நடைபயண தூரம்.வழக்கம் போல அம்மாவின் இடுப்பில் அமர்ந்து கொண்டு அந்த நாள் துக்கமாக தொடங்கும். நினைப்பு எல்லாம் பள்ளிகூடத்தின் மீதுதான் இன்னைக்கு போகாம வீட்டிலேயே விளையாடிவிடலாம் என்றால் ம்ம்ம்.... கும்....எங்க அம்மா இருக்கே. அவள் ஒரு மந்திரக்காரி கண்ணு இங்க வா சாப்பிடு நேரம் ஆயுடுச்சி நாம்ம கடைக்கு போய் மிட்டாய் வாங்கிகிட்டு வரலாம் என்பாள்.இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் மந்திரக்காரின்னு சொன்னேன்னு.எப்படியோ அவள் மந்திரத்தை முடித்து என்னை தூக்கி இடுப்பிலும் என் புத்தக பையை கையிலும் பினைத்துக்கொண்டு நடக்க ஆரம்பிப்பாள். சாதரணமாகவே நான் நிறைய பேசுவேன் என்று அம்மா சொல்லுவாள் சில சமயம் தம்பி பேசம வா இல்லன்னா டாக்டர் தாத்தாக்கிட கூட்டிக்கிட்டு போய் வாய்ல ஊசி போட சொல்லிடுவேன்னு அவள் மிரட்டிய தருனங்களும் உண்டு. இப்படி பலநாட்கள் கடந்து போய் இருக்கிரது. என் நினைவில் உள்ள அந்தநாள்


வழக்கம் போல் எல்லாம் முடிந்து பள்ளிகூடம் கிளம்பும் தருனம் வாசல்படி கடந்து தெருவிர்க்கு வந்து விட்டோம். அம்மா என்றேன் என்ன கண்ணு என்ன ஆச்சு சொல்லு என்றாள் ம்ம்ம்... சொல்லு மறுபடியும் அம்மா நான் ஏம்மா பள்ளிக்கூடம் போகனும் ? நான் என்ன கேள்விகேட்டாலும் பதிலை தயாராக முந்தனையில் முடிந்து வைத்திருப்பாள். வேற என்ன காசுதான் 10 பத்து பைசாகவாக முடிந்துவைத்திருப்பாள்.ஆனால் அன்று பதிலையும் தந்தாள் பதிலாக பத்துபைசாவும் தந்தாள். ம்ம்ம்... அவள் சொன்ன பதில்


எண்-1 கண்ணு நி பள்ளிகூடம் போய் நல்லா படிச்சாத்தான் நிறைய பணம் சம்பாதிக்கலாம். நிறைய பணம் சம்பாதிச்சாத்தான் நி பெரிய மனிசனா ஆவ இல்லையினா பாரு அந்த பூச்சாண்டிகாரம் போல் ஆயிடுவ அதனாலத்தான் அம்மா உன்னை பள்ளிக்கூடம் அனுப்புறேன் சொல்லி முடித்தாள் பதில் எண்-1 யை

எண்-2 கண்ணு இந்த இந்த காசை பத்திரம்மா சட்டை பையில் போட்டுக்கோ மதியம் வரும்போது மிட்டாய் வாங்கிக்கோ என்றாள்



டிஸ்கி:- இன்று வரை என் நினைவில் அந்த கேள்விகளின் தருனங்கள் சுவடுகளாய் பதிந்ததினால் வந்த பதிவு இது இப்போதும் தேடுகிரேன் எங்கே அந்த பத்து பைசாவை இன்று ....


இன்னும் நிறைய கேள்விகளுடன்..........



Monday, August 2, 2010

வேலை வேலை.......






ஒரு மாசம் ஆயிடுச்சி நான் வலைதளத்தில் உலாவி.என்ன செய்யா வேலை வேலை ஒன்னுமே முடியல பித்துபிடித்ததுபோல ஆமா நீங்க சொல்றது என் காதுல விழுது.அதேமாதிரித்தான் அலைந்தேன் கடந்தமாதம் முழுவதும்.


நிறைய மாற்றங்கள்.....

நிறைய ஏமாற்றங்கள்....

நிறைய தவிப்புகள்...

நிறைய தவறுகள்... இன்னும் எவ்வளவே ம்ம்ம்ம்...



நிறைய விவாதிப்போம் இந்த வேலைய பத்தி எந்த வேலை என்று நீங்கள் கேட்பது ம்ம்ம்ம்ம்... எல்லா வேலையும் தான்



இந்த ஒருமாதத்தில் என்னில் உதயமான கேள்விகளை நான் பதிவாக இட முடிவு செய்திருக்கிரென் அதற்கான தலையங்கம் தான் இந்த பதிவு...



Wednesday, June 30, 2010

காதல் பேருந்து...

கூட்ட
நெரிசலில்
தொங்குகிறேன் நான் ...

உன்னையும் தான்
என்னை காதலிப்பாயா..?

நான்
கைவிட்டால்
இறந்து வாழ்வேன்
நீ கை விரித்தால்
வாழ்ந்துகொண்டே சாவேன்...

காதல் பேருந்தில்
கசங்கி புழுங்குது
என் கனத்த மனசு
ஒருதலையாய்
உன்னை நினைத்து....




டிஸ்கி:-
என்னவே நான் மட்டும்தான் அவள் போகும் இந்த பேருந்தில் செல்வது போல நினைத்ததால் வந்த வரிகள் உண்மையா அப்படின்னு கேள்வியெல்லாம் கேக்ககூடாது....சரியா




இது உங்கள் இடம் ம்ம்ம்ம் பூந்து விளையாடுங்க ஆனா சரியா காதல் பேருந்துதான அப்படின்னு பாத்து குத்தனும் சொல்லிட்டேன்.இல்லையினா வண்டி நிறுத்ததில் நிக்காமல் போய்விடும். ஒகே வா...


Sunday, June 20, 2010

என்னமோ ஆயிடுச்சி அதனாலதான் இப்படி எப்புடி..

சந்திரன்

என் தனிமையில்
நீ மட்டும்
துணையாய்
ஏன் ?

அவ்வளவு இரக்கமா
உனக்கு என் மீது

அவளை விட !!!

சத்தம்

தூக்கு கயிறுக்கு
முத்தமிட்டேன்
ஏன் தெரியிமா ?

என்னை
தூக்கிலிட அவள்
சத்தம் போட்டாள்....

நேற்று

காலையில்
ஒரே கூட்டம்
தெருவில்

கோவில் தங்க
நகையை காணவில்லை
என்று...

நானும் அதையேத்தான்
சொன்னேன்
எங்க தங்கத்தை காணவில்லையென்று....

நிறம்னு சொல்றாங்க...

கண்ணாமூச்சு
ஆடலாம் வா என்றாள்

கண்ணை கட்டி
சுற்றினாள்
என் உலகமே கார்நீலமானது
அவளையும் சேர்த்து......


வெடிக்கும்

கல்லறைக்குள்
போயினும்
என் இருதயம் துடிக்கும்
உன்னை நினைத்து

நீ மட்டும்
துடித்துவிடாதே
வெடித்துவிடும் என் இருதயம்....


என்னமோ போங்க

தானம் கொடுத்தமாடு
தாடி களைந்த துறவி
துளிர்விடாத மரம்
துணையில்லாத நான்...



எல்லா தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.....
அப்பா இப்ப நீ எங்க இருக்க இந்தா என் முத்தம் உனக்கு


டிஸ்கி:- எல்லாம் ஒரே பிதற்றல் அவ்வளவுதான் மத்தபடி ஒன்னும் இல்ல

டிஸ்கி:- நேற்று எங்க ஆலுங்கள நாங்கலே எப்புடி



என்னகோபம் இருந்தாலும் உக்காந்து பேசலாம் ஆனா உங்க ஓட்டை நீங்கதான் போடனும். அங்க பாருங்க ஒருத்தன் கண்ணாமூடிக்கிட்டு குத்தி
என்னோட பிதற்றல் யாரையிம் போய் சேராம பன்னிடுவான் போலிருக்கே

Saturday, June 19, 2010

இரவு நேர உளறல்



நன்றி கூகுல்







இரவு
நேரக்கிளியே
சத்தம் போடாதே....


இது நிலவு
காயும்நேரம்



இமைமூடி
உளறுகிறாள் என்
இளைய செல்லம்...


கொஞ்சமா
கொஞ்சு கிளியே
உன் செல்லத்தை
கோபம் கொள்ளாம
என் மீது.....






உங்களுக்கும் இந்த கிளியின் சத்தம் கேட்டிருந்தால் மறக்காமல் உங்கள் உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் குத்தி செல்லவும்


Saturday, June 12, 2010

ஜுரம் வந்தால்தான் தெரியிம்

கடந்த முன்று நாட்களாக ஒன்னுமே முடியல எல்லாம் இந்த காய்ச்சல் தான். திடிரென்று பரவி இப்பொது அமீரகத்தில் தலைகாட்ட துடைங்கி உள்ளது. எல்லாரும் உஷார். சீக்கிரம் பக்கதில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஏன் இதை இங்கே எழுதுகிரென் என்றால் அவ்வளவும் அனுபவம். பட்டாதான் தெரியிம் அப்படின்னு சொல்லுவாங்க.
கடந்த மூன்று நாள் அய்யே !!! அம்மா !!! என்று அமீரகத்தில் நான் உலரியதை என் தாய் கேட்டிருந்தால் இரத்தகண்ணிர் வடித்திருப்பாள். அவ்வளவு கஸ்டம். இது ஒருவகையான வைரஸ் காச்சல் என்று மருத்துவர்கள் சொல்கிரார்கள்.
கட கட என எல்லாரையிம் பற்றி தோற்றி ஆதிக்கம் செய்துவிடும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் காச்சல் என மருத்துவர்கள் விளக்கம் சொல்கிரார்கள்.
எனக்கு தெரிந்தவரை எங்களுடைய கம்பெனியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சுமார் 18 தொழிலாளர்களை புதிதாக அழைத்து வந்தார்கள்.
அதர்க்கு பின்பு தான் காச்சல் ஆரம்பம் ஆனது. ஒருவர் பின் ஒருவராக எங்கள் விடுதியில் உள்ளவர்களுக்கு காச்சல் வர ஆரம்பித்து விட்டது. நான் மட்டும் என்ன விதிவிளக்கா.எனக்கும் அந்த வைரஸ் காச்சல் வந்துவிட்டது.
பின்பு எனக்கு சிரிய சந்தேகம் எந்த அளவிற்கு உண்மை என அறிய இன்று காலை தொலைபேசியில் என் அண்ணனை தொடர்பு கொண்டு விபரத்தை சொன்னேன். பதிளுக்கு அவன் ஆம் கேரளாவில் இப்போது பன்றி காச்சல் பரவிக்கொண்டிருக்கு நீ உடல் நலத்தை கவனித்துக்கொள் என்று சொல்லி முடித்தான் என் அண்ணன்.
சற்று தாமதமாக நான் இந்த தகவலை வெளியிடுகிரென் என்று நினைக்கும் போது சிறு வருத்தம் கூட என்ன செய்ய இன்றுதான் என்னால் சராசரி வாழ்க்கைக்கு திரும்பமுடிந்தது.
என்ன என்ன நடக்கும் இந்த காச்சல் வந்தால்
முதுகு தண்டுவடம், கை, கால்,கழுத்து இவை அனைத்தும் இனையிம் பகுதி அதாவது (JOINT) தாங்க முடியாத வலி ஏற்படும்.
முழுமையாக அதாவது வயிறு நிறையிம் அளவுக்கு உங்களால் உணவு உட்கொள்ள முடியாது.
தண்ணிர் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும். தண்ணிர் குடித்துக்கொண்டே இருந்தால் வாந்தி வந்துவிடும்
வாய் எப்போதும் கசப்பு சுவையை சுவைத்துக்கொண்டே இருக்கும்.
என்ன செய்யவேண்டும் இந்த காச்சல் உங்களை பற்றிக்கொண்டால்
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அனுகி ஒன்று அல்லது இரண்டு பாட்டில் குலுக்கோஸ் ஏற்றிக்கொள்ளவும்.
மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றவும்.
ரசம் சாதமும் , கஞ்சி சோறும் இதமான உணவு.
பால், பிரட் எல்லாம் நிறைய எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
உங்கள் யாருக்கும் இந்த வைரஸ் பற்றி தோற்றி ஆதிக்கம் செலுத்தவில்லை என்றால். சுகந்திர உரிமையை இங்கே பகிர்ந்துகொள்ளவும்


Friday, May 28, 2010

வசந்தகாலத்தின் வலிகள்


முதல் பூசை(ஜை)

நாலு வயல்
நாத்து நட்டு காத்திருப்பான்
என் பாட்டன் பசியேடு
பாட்டி சோறு
கொடுத்துவிடுவா
என்கிட்டே அப்படின்னு

ஆத்தை கடந்து
போகும் போது பாத்து
போங்கன்னு சொல்லிவிடுவா

ஆத்துல கால
வச்சதும் போயிடும் அரமனசு
தண்ணியேடு
அதில் ஓடும் மீன
பாத்ததும் முழு
மனசும் போய்டும் மீன் புடிக்க

பொழுது போவது
தெரியாம நாங்க பிடிச்சி
விட்டிருப்போம்
ஒரு கூட மீன
என் அண்ணன் சொல்லுவான்
போதுண்டா போலாம்னு
பயபுல்ல நம்ம யாறு சொல்லி
கேட்டிருக்கோம்
கொஞ்சநேரத்துல
எலெய்ய்ய்ய்ய்...........செந்திலூ.....
சத்தம் போட்டு
வந்தா என் பாட்டி
கொடுத்த ரெண்டுவாட்டி
வாதமடக்கி
குச்சியெடுச்சி

இப்பக்கூட
லேசா வலிக்குது
அதை என்னி
நினைச்சிபாக்கும் போது....


டிஸ்கி:-வலிகளின் வடுக்கள் நேற்று இரவு நீண்ட நேரமாக தழும்புகளை வருடியதால் வந்த வரிகள்

என் வலிகள் எல்லோரையிம் சென்றடைய உங்கள் உரிமையை இங்கே பகிர்ந்துகொள்ளவும்

Sunday, May 9, 2010

வசந்த காலம் அது வருமோ இனி



அத்து மீறி நாம்
பறித்த பூக்களின் வலியை
யாரிடம் போய் சொல்ல
சொல்லி சிரித்திருக்கிறோம்
நட்பூவட்டத்தில் நாம்


அர்த்தஜாமத்தில்
நான் அழைத்தாலும்
ஆ சொல்லுடா
என்பாயே


பேசி பேசி
நாம் கழித்த நாட்கள்
பேப்பரில் எழுதினாலும்
கொள்ளாதே நண்பா


பேரின்ப சேற்றை வாரி
இறைத்துக்கொண்டோம்
நம் மீது
அந்த நீல பெருங்கடலில்
நீந்தி குளிக்கும்போதேல்லாம்


உன்பெயரையிம்
என்பெயரையிம்
ஒன்றாக வைக்க சொல்லியிருப்பானோ
பிரம்மன் யோசிக்கிறேன்
சில நேரங்களில்
நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்...


எத்தனை நாட்கள்
வந்துபோயினும்
இன்று போல் கிட்டாது
இனிமேல் நீ மீண்டும் பிறக்க


நி
தேனி கம்பம் மதுரை
போய் தேடிவிட்டு வந்த
தேவதை பற்றி நி
சொல்லி கேட்ட நட்கள்
இன்று நினைத்தாலும்
திரும்பி வருமோ


இன்பவிதைகளை
என்னுள் விதைத்த
நி விதையாய்
இன்றுதான் விழுந்தாயே
பூமித்தாயின் மடியில்

திரும்பவும்
சந்திக்கும் சந்தர்ப்பம்
கிடைத்தால் சொல்லிவைக்கிறேன்
பிரம்மனிடம்
நண்பர்களாகவே
பிறக்கவேண்டும்
இன்னும் ஒருமுறை..........


செந்தில்குமார்.ப
இன்று பிறந்தநாள் கொண்டாடும்
எனது நண்பனுக்காக வாழ்த்து(ங்)கள்....

Saturday, May 8, 2010

தூறல் மழையிம் துபாய் ஆசையிம்


புள்ளிகளை
கூட்டிக்கழித்திருக்கிறேன்
மொட்டை மாடியில்
நீ வரும் போது.....
சண்டைகள் கூட
வந்து போயிருக்கிறது
எனக்கும் தமயனுக்கும்
என் கூட்டல்பிழை என்று...
பாட்டன் வீட்டு
கானிநிலத்தில் கிடந்து
உருண்ட நாட்கள்
உருண்டு ஓடின
என்னை விட்டு ஓர்
ஆயிரம் மைல் தொலைவில்...
விபரம்
ஏதும் அறியாமல்
என்னுள் விளைந்த விளைவு
வெளிநாடு.....
இன்று லேசான தூறல்
பாலை மணலில்
பழைய ஞாபகம்
பதிந்து போனது
பாலை மணலின் தூறல்
மழை போல்...
லேசான கண்ணீர்
செலவாகிபோன
அந்தநாட்களின் நினைவில்
என் கண்களின் ஓரத்தில்......
துக்கங்களை
தூக்கிக்கொண்டு
தூறுது இந்த தூறல் மழை
கார்மேகங்களை
துனையாக்கிகொண்டு
என் ஏக்கத்தை தூறலாய்.....

Tuesday, April 20, 2010

செலவாகிபோன நாட்கள்........



என்னவன்


அம்மா சோப்பு
என்றால் அது ஏனடா
கேட்குது என்வீட்டு வாசல் வரை
நான் கேட்பேன் என்றா
காய்கறிகாரனிடம்
என்னடா கடலை உனக்கு
போகவிடு அவனை
போய்விடும் வாடிக்கை
நான் வாசலிலே நிற்கிறேன்
நீ வேலைக்கு போகும் வரை............


அம்பு ( அன்பு )


எத்தனை அம்புகள்
என் வீட்டு ஜன்னலில்
ஜயோ பாவம்
லேசான காயம்
என் ஜன்னலின்
கதவுக்கு
நான் தப்பித்தேன்
காயம் ஏதும் இன்றி..........


இன்று ஞாபக வலி


அர்த்தங்கள்
ஆயிரம் சொல்லியிம்
விளங்கவில்லை
அந்நாளில் உனக்கு
நான் வீட்டுக்கு வெளியே.............




Tamilish

Thursday, April 8, 2010

சில நொடிகளின் சிந்தனை............





கல்லறை

அங்கே நானும்
தூங்க ஆசை
இறந்தபின்பு அல்ல
இப்போதே....



காதல்

முத்தமிழின் கூட்டு


கனவு

இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
எல்லாம் இங்கே
இறந்துபோன காலம்....



தூரத்தில் அவன்


நினைத்தால்
அனைத்துக்கொள்வேன்
உன்னை என் மார்போடு
தலையணையாய்
நிலா சோறுகூட
நீ போட்டுத்தான்
போயிருக்கிறது என் இரவுகள்
நெற்றி பொட்டில்
நீ இட்ட முத்த வடு
இன்னும் கூட இருக்கு
நீ எங்க போன
இப்ப ஒரு முத்தம் வேணும் எனக்கு......



வயோதிகன்


தோழிகளுடன்
கைகோத்து நான்
போன தொடுவானமெல்லாம்
தோன்றி தோன்றி
மறையுது இன்று
ஏனோ
அவள் தோற்றம்
மங்கலாய்
நான் முதுமையை எட்டிவிட்டேனோ......?

Thursday, April 1, 2010

நீண்ட நாள் ஆசை........





மீண்டும் என் தாய் மடியில் தலைவைத்து துயில...

நான் பிறந்ததை மறுமுறை என் தாய் சொல்லி கேட்க..

தந்தையோடு தயக்கம் இல்லாமல் பேச...

பால்ய வயது தோழிகளை தேடி செல்ல...



பணம் கொஞ்சம் சேர்த்து பனி உறையும் தேசத்தை காண...

அர்த்தஜாமத்தில் நடந்து ஆற்றங்கரை செல்ல...

மலர்கள் பூத்துக்குழுங்கும் சோலையில் தனிமையில் கிடக்க...

பற்றாகுறை இல்லாமல் வாழ்க்கை பயணத்தை தொடர...



என்னவளுடன் கடற்கரை மணலில் கைகோர்த்து நடக்க...

அவள் காலடிதடத்தை நீண்ட தூரத்தில் நின்று காண...

அதிகாலை விடியலை அனுதினம் அவளுடன் ரசிக்க...

என்மார்பு வலிக்க தங்ககிள்ளைகள் நடமாட...

Saturday, March 20, 2010

எனது முதல் அறிமுகம்


அனைத்து தமிழ் படைப்பாளிகளுக்கும்

தோழன் செந்தில்குமாரின் வணக்கங்கள்.........


சில வரிகள்

என் தாய் (மொழி)க்கு

பிரம்மனின் பிழையில்லா

பிம்பம் நி

கோவில்களில் இல்லா

கருவறை நி...............


Tamilish