Tuesday, June 7, 2011

அவள்....


உன்னை தேடி

உலா நூறு போயிருப்பேன்

என் உள்ள

கனவுகளில்


ஒருபோதும்

நீ கிடைத்ததில்லை எனக்கு

விடியும் போது

வெறும் கைகளோடு தான்


நான்

விழித்திருப்பேன்...



Sunday, June 5, 2011

காத்திருப்பு...




உனது

வரவிற்க்காக

காத்திருக்கும்

என் வீட்டு வாசல்...


வெகு நாட்களாய்

விதவை கோலத்தில்

நீ வருவதெப்போ....




Thursday, June 2, 2011

நாட்குறிப்பு...




நாட்குறிப்பெழுதும்

பழக்கமில்லை

எனக்கு


பழகிகொண்டேன்

உன் பழக்கம்

கிடைத்ததால்


நாட்கள் போயின

நாட்குறிப்பு மட்டும்

மிச்சமாய் என்னிடம்

நீ.......




Sunday, May 1, 2011

சொல்லிவிட்டுபோனால்.......




இன்றாவது வா
என்னுடன் ஏமாற்றியது போதும்...


அந்த இளங்காற்று வீசும்
கடற்கரைக்கு போய் வரலாம் என்றேன்....

இங்கேயே நில்
வந்துவிடுகிறேன் என்றாய்...


வருடங்கள் போயின
வயோதிகனாகிவிட்டேன் நான்...


உன்னை சோதனை செய்வேன்
என்று சொல்லியிருந்தாய்...


ஒரு தருணத்தில்


சோர்ந்து போய்விடவில்லை
சோகமும் என்னை சூழ்ந்து விடவில்லை

காத்திருக்கிறேன் உனக்காக
கரையோடு அடித்து செல்லும்
நுரைபோல...


Saturday, February 26, 2011

சொந்த ஊருக்கு போன கதை-2


ம்ம்ம்... ஒருவழியா வேலையெல்லாம் முடிஞ்சி இப்பதான் நேரமே கிடைச்சதது...

சரி காப்பி குடிச்சுட்டு நீங்க சீக்கிரமா வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல...சரி கதைக்கு வருவோம்.

சார்ஜா விமானநிலைய போலிஸ் எங்களை நிறைய கேள்விகள் கேட்டு பதில் ஏதும் கிடைக்காததால்...புரியாதால்..சரி போய்ட்டு வாங்க சார்னு...வேர என்ன சலிவுட்டுதான்

நண்பா எப்படி உன்னால மட்டும் இப்படி முடியிது அவ்வளவு அந்த போலிஸ் கேட்டும் நீ வாய open பன்னவே இல்லையே...மாப்பு பதில் சொன்னா யார் உள்ள போரது...

ஒரு வழியா மூட்டை முடிச்சு எல்லாம் இல்லைங்க அதான் சூட்கேஸ் லகேஜ் எல்லாம் தூக்கிகிட்டு உள்ளே ஏறிட்டோம்ல. வழக்கம் போல அந்த ஏர்வேஸ் அக்கா வணக்கம் சொல்லி நீங்க அங்க தம்பி நீங்க இங்க அப்படின்னு சீட்டு புடிச்சி கொடுத்துச்சு.அக்கா உங்களுக்கு ஒரு பெரிய நன்றி ஆள விடுங்க.நான் தூங்க போரேன்.முழிச்சிருந்தா பயத்துல ஃப்ளைட் பறக்கரத்துக்கு முன்னாடி நான்பறந்துடுவேன் அப்படின்னு உள்மனதிற்க்குள் லேசான பதற்றம்

மூனுமணி நேர பயணம் சென்னை எங்களை பட்டு கம்பளம் விரித்து வரவேற்றது....அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் உங்களை வரவேற்கிரது என்ன மரியாதை நம்ம ஊருன்னா நம்ம ஊருதான்...



அப்படியேல்லாம் ஒன்னும் இல்ல சொற்கமே என்றாலும் நம்ம ஊரபோல
வருமா...



Thursday, February 10, 2011

சொந்த ஊருக்கு போன கதை....

ஊருக்கு போய்விட்டு வந்து பார்த்தா.......ஒன்னுமே புரியல அய்யய்யோ பதிவு போட்டு ஒருமாசம் ஆகபோகுதே அப்படின்னு உக்காந்து யோசிச்சா....திடிர்னு ஒரு யோசனை ஏ நாம ஊருக்கு போன கதையா பதிவா போடலாம்னு முடிவை எடுத்து..........

வாங்க அப்படியேல்லாம் மொறைக்க பிடாது கதை சொன்னா கேக்கனும் சரியா,,,,

சரியான வண்டியை பிடிச்சி சார்ஜா......வந்து உள்ளே போனா....ஊரே அங்கதான் நிக்கிது.....வரிசையில ஊரபாக்கபோக....அம்புட்டு கூட்டம் ஒருவழியா நானும் எனது நண்பரும் சரியா கவுண்டருக்கு வந்து நின்னா....

அங்க இருந்த ஒரு அக்கா இப்படி சொல்லிச்சி........


சார் நீங்க ஒரு நாலு கிலோ கூடுதலாக (அள்ளிகிட்டு போரிங்க )எடுத்துகிட்டு போரிங்க sorry sir you have to pey for 4 kG அப்படின்னு அந்த அக்கா சொல்ல தூக்கி வாரி பொட்டுடிச்சி.....அக்கா பணத்தை கட்ரத தவிற வேற எதுவும் வழியே இல்லையா அப்படி கேட்டார் எனது நண்பர்.....

நான் வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம அக்கா எங்கள பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையான்னு கேட்டேன் அவ்வளவுதான்.....முடியவே முடியாதுன்னு பழையபடி no way what you think mmm..... ஜயோ அக்கா நீங்க கோவபட்டா நாங்க ஊருக்கு போய் இறங்க முடியாது போய்சேரவேண்டியதுதான்.....அப்படின்னு உள் மனசுக்குள் ஒரு குல்லநரி ஓலமிட்டு கொண்டிருந்தது.ஒரு வழியா பணமே கட்டாமா உள்ளே போய்டோம்னா பாத்துகுங்களே......


அவ்வளவும் உழைப்பு ( சாமார்த்தியம் )சரி சரி யாரும் கோவபடகூடாது சரியா.... ஆம சொல்லிட்டேன்


அப்புரம் என்ன ஜாலிதான் சின்னதம்பி படம்தான் ஞாபகத்துக்கு வந்தது.......அதுல அந்த மனநிலை சரியில்லாத ஆள் எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்.......அப்படின்னு சொல்லிகிட்டே ஓடுவார் இல்லையா.........

அதெ தான் அந்த மனநிலையில் தான் நானும் மனசுக்குள் மல்லிகை மணம் போல மணக்க தொடங்கிய அம்மாவின் ஆட்டுகள் குழம்பு வாசம் நானும் மனசே சரியில்லாம நானும் ஊருக்கு போரேன் நானும் ஊருக்கு போரேன்......ஒரெ சவுண்டுதான் சத்தம் போட்டத பார்த்த அந்த அரபி மாமா ..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சு come with me ........
மறுபடியிம் எழுதுவேம்ல....... அடுத்தா பதிவில்....போய் காப்பி டீ குடிச்சிட்டு உடனே வந்திராதிங்க கொஞ்சம் பொருமையாகவே வாங்க.....


அப்பத்தான் கதைய சொல்லுவேன் சொல்லிட்டேன்.......


சிக்கிரம் வந்துட்டு அப்புரம் கதைய சொல்லல அப்படின்னா.... அதுக்கு கம்பெனி பொறுப்பு இல்ல......