Saturday, February 26, 2011

சொந்த ஊருக்கு போன கதை-2


ம்ம்ம்... ஒருவழியா வேலையெல்லாம் முடிஞ்சி இப்பதான் நேரமே கிடைச்சதது...

சரி காப்பி குடிச்சுட்டு நீங்க சீக்கிரமா வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல...சரி கதைக்கு வருவோம்.

சார்ஜா விமானநிலைய போலிஸ் எங்களை நிறைய கேள்விகள் கேட்டு பதில் ஏதும் கிடைக்காததால்...புரியாதால்..சரி போய்ட்டு வாங்க சார்னு...வேர என்ன சலிவுட்டுதான்

நண்பா எப்படி உன்னால மட்டும் இப்படி முடியிது அவ்வளவு அந்த போலிஸ் கேட்டும் நீ வாய open பன்னவே இல்லையே...மாப்பு பதில் சொன்னா யார் உள்ள போரது...

ஒரு வழியா மூட்டை முடிச்சு எல்லாம் இல்லைங்க அதான் சூட்கேஸ் லகேஜ் எல்லாம் தூக்கிகிட்டு உள்ளே ஏறிட்டோம்ல. வழக்கம் போல அந்த ஏர்வேஸ் அக்கா வணக்கம் சொல்லி நீங்க அங்க தம்பி நீங்க இங்க அப்படின்னு சீட்டு புடிச்சி கொடுத்துச்சு.அக்கா உங்களுக்கு ஒரு பெரிய நன்றி ஆள விடுங்க.நான் தூங்க போரேன்.முழிச்சிருந்தா பயத்துல ஃப்ளைட் பறக்கரத்துக்கு முன்னாடி நான்பறந்துடுவேன் அப்படின்னு உள்மனதிற்க்குள் லேசான பதற்றம்

மூனுமணி நேர பயணம் சென்னை எங்களை பட்டு கம்பளம் விரித்து வரவேற்றது....அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் உங்களை வரவேற்கிரது என்ன மரியாதை நம்ம ஊருன்னா நம்ம ஊருதான்...



அப்படியேல்லாம் ஒன்னும் இல்ல சொற்கமே என்றாலும் நம்ம ஊரபோல
வருமா...



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.