Wednesday, August 4, 2010

வேலை வேலை-1 தொடர்பதிவு

கேள்விக்கா தட்டுபாடு...




நிறைய கேள்விகள் யாருங்க சொல்லிதராங்க இப்படியேல்லாம் கேக்க சொல்லி. நான் நினைக்கிறேன் எல்லாம் பிறக்கும் போதே பிக்‌ஷ் பன்னிக்கிட்டு பிறப்பாங்களோ? சரி விடுங்க நாம் எடுத்துக்கொண்ட இந்த வேலையாவது ஒழுங்க செய்யலாம்.



இப்போது என் நினைவிற்க்கு வருவது பள்ளிக்கூட நாட்கள் தான். அட பாவி நீ அங்க இருந்தே ஆரம்பிச்சிட்டியா என்பது என் காதுகளுக்கு கேக்குது. ம்ம்ம்ம்..என்ன செய்ய உன்மையை சொன்னா யாரு கேக்குரா.


பள்ளிகூடத்திற்க்கும் வீட்டிற்க்கும் சுமார் 15 நிமிட நடைபயண தூரம்.வழக்கம் போல அம்மாவின் இடுப்பில் அமர்ந்து கொண்டு அந்த நாள் துக்கமாக தொடங்கும். நினைப்பு எல்லாம் பள்ளிகூடத்தின் மீதுதான் இன்னைக்கு போகாம வீட்டிலேயே விளையாடிவிடலாம் என்றால் ம்ம்ம்.... கும்....எங்க அம்மா இருக்கே. அவள் ஒரு மந்திரக்காரி கண்ணு இங்க வா சாப்பிடு நேரம் ஆயுடுச்சி நாம்ம கடைக்கு போய் மிட்டாய் வாங்கிகிட்டு வரலாம் என்பாள்.இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் மந்திரக்காரின்னு சொன்னேன்னு.எப்படியோ அவள் மந்திரத்தை முடித்து என்னை தூக்கி இடுப்பிலும் என் புத்தக பையை கையிலும் பினைத்துக்கொண்டு நடக்க ஆரம்பிப்பாள். சாதரணமாகவே நான் நிறைய பேசுவேன் என்று அம்மா சொல்லுவாள் சில சமயம் தம்பி பேசம வா இல்லன்னா டாக்டர் தாத்தாக்கிட கூட்டிக்கிட்டு போய் வாய்ல ஊசி போட சொல்லிடுவேன்னு அவள் மிரட்டிய தருனங்களும் உண்டு. இப்படி பலநாட்கள் கடந்து போய் இருக்கிரது. என் நினைவில் உள்ள அந்தநாள்


வழக்கம் போல் எல்லாம் முடிந்து பள்ளிகூடம் கிளம்பும் தருனம் வாசல்படி கடந்து தெருவிர்க்கு வந்து விட்டோம். அம்மா என்றேன் என்ன கண்ணு என்ன ஆச்சு சொல்லு என்றாள் ம்ம்ம்... சொல்லு மறுபடியும் அம்மா நான் ஏம்மா பள்ளிக்கூடம் போகனும் ? நான் என்ன கேள்விகேட்டாலும் பதிலை தயாராக முந்தனையில் முடிந்து வைத்திருப்பாள். வேற என்ன காசுதான் 10 பத்து பைசாகவாக முடிந்துவைத்திருப்பாள்.ஆனால் அன்று பதிலையும் தந்தாள் பதிலாக பத்துபைசாவும் தந்தாள். ம்ம்ம்... அவள் சொன்ன பதில்


எண்-1 கண்ணு நி பள்ளிகூடம் போய் நல்லா படிச்சாத்தான் நிறைய பணம் சம்பாதிக்கலாம். நிறைய பணம் சம்பாதிச்சாத்தான் நி பெரிய மனிசனா ஆவ இல்லையினா பாரு அந்த பூச்சாண்டிகாரம் போல் ஆயிடுவ அதனாலத்தான் அம்மா உன்னை பள்ளிக்கூடம் அனுப்புறேன் சொல்லி முடித்தாள் பதில் எண்-1 யை

எண்-2 கண்ணு இந்த இந்த காசை பத்திரம்மா சட்டை பையில் போட்டுக்கோ மதியம் வரும்போது மிட்டாய் வாங்கிக்கோ என்றாள்



டிஸ்கி:- இன்று வரை என் நினைவில் அந்த கேள்விகளின் தருனங்கள் சுவடுகளாய் பதிந்ததினால் வந்த பதிவு இது இப்போதும் தேடுகிரேன் எங்கே அந்த பத்து பைசாவை இன்று ....


இன்னும் நிறைய கேள்விகளுடன்..........



5 comments:

  1. nalla pagivru. eluthup pilaiagalai gavanikkavum

    ReplyDelete
  2. அன்றைக்கு குச்சி மிட்டாய் வாங்கி சாப்பிட்டது, அந்த பத்து பைசாவில் தான்... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

    ReplyDelete
  3. வாங்க கார்த்திக் வருகைக்கு நன்றி

    திருத்திக்கொள்கிறேன்...


    வாங்க சித்ரா

    எப்படி இருந்தது பயணம் ....

    ReplyDelete
  4. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்... அந்த பத்து பைசா கிடைச்சதா? இல்லையா?
    மிட்டாய் வாங்கினீங்களா? இல்லையா??

    கேள்விக்கா தட்டுப்பாடு???? அச்சச்சோ... இவங்க பதிவு வந்து இப்படி, கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டனே..??

    ReplyDelete
  5. கேள்விகள் நிறைய கேக்கனும் அப்பதான் வாழ்க்கை கேள்விகுறியா மாறாம இருக்கும் எப்புடி.... ஆனந்தி வருகைக்கு நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.