Tuesday, October 12, 2010

அப்பா....


தங்கமான நினைவுகள்.....
மரக்கிளையில் இழைகள் துளிர்விடும் தருனம்...


வியந்து
பார்க்கிரேன்
உங்களை நான்....


என்
விடியல் பொழுதுகளில்
உங்கள் மார்பினில்...


நான் தூங்கும் வரை
அனைத்திருப்பாள்
அம்மா...


நான் தூங்கிய பின்பும்
உங்கள் மார்பினில்
அனைப்பில் எத்தனை
நாட்கள் கடந்துபோயிருக்கின்றன...


எண்ணியதில்லை
எனக்கு அப்போது
எண்கள்
புலப்படவில்லை....


பால்ய வயதுகளில்
படுக்கையை ஈரமாக்வேனாம்
அம்மா இப்போது
அடிக்கடி சொல்லுவாள்...


நீங்களும்
அப்படித்தானாம்
பாட்டி சொல்லியிருக்கிராள்
அந்த காலத்துல உங்க
அப்பனும் அப்படித்தான் கண்ணு....


பத்து பக்க
ஏடுகளில் பல நூறு முறை
எழுதியிருப்பேன்...

என் அப்பா
இன்று காலை அடித்தார்
அரை மணிநேரத்திர்க்கு
பின்பு அனைத்துக்கொண்டார்....


என் அப்பா
இன்று கோவில் திருவிழாவுக்கு
கூட்டிக்கொண்டுபோனார்
கோவிலை சுற்றி காட்டினார்
என்
பிஞ்சு விரல் பிடித்து
லேசாக சிவந்திருக்குமோ
நினைத்து பார்க்கிரேன்...


எங்க அப்பா
அப்படி இப்படி என்று
கிறுக்கிய ஏடுகளையெல்லாம்
இப்போது
மொழிபெயர்ப்பு செய்கிரேன்...


மொழி தெரியாத
தேசத்தில் முழித்துக்
கொண்டு விழி பிதுங்கி...
மனசு பூரா
நீங்கதான் அப்பா
என்னமோ பன்னுது
அதையேல்லாம் இப்போது
என்னும் போது...


என்ன பன்னிகிட்டு
இருக்கிங்க இப்போ
புரையேரியிருக்கும
உங்களுக்கு
நான் நினைத்ததாலோ
என்னவோ....


என் அன்பின் முத்தங்கள் உங்களுக்கு அப்பா......ச்ச்ச்





டிஸ்கி:- பாச தாகங்கள் பஞ்சமான இந்த பலைவனத்தில் என் பஞ்சனையில் ஏதோ கனம் கானோம்.

என் தலையனை சலவைக்கு போனதால்தான் இந்த வசந்தகால வரிகள்







6 comments:

  1. மறைந்து போன எனது அப்பாவை நினைத்து ஏங்க வைத்து விட்டீர்கள். கண்களில் நீருடன் வாசிக்கிறேன்.

    ReplyDelete
  2. உங்க அப்பாவை நினைவு கூர்ந்து, அவருக்கும் புரையேறி இருக்கும்..
    எனக்கும் என் அப்பா ஞாபகம் வந்து விட்டது.. :-)) நல்ல பகிர்வு..

    ReplyDelete
  3. மறைந்துபோன என்தந்தையின் ஞாபகம் உங்கள்வரிகளுக்கு வந்துபோக விழிநீரை தாரைவார்க்கிறேன்..

    நல்ல பகிர்வு செந்தில்..

    ReplyDelete
  4. செந்தில். எங்கே ஆளையே காணோம்..

    ReplyDelete
  5. வணக்கம் மலிக்கா.........

    அதிக வேலை பளுவின் காரணமாக என்னால்
    பதிவு இடமுடியவில்லை வருத்தமாக உள்ளது.

    நன்றிகள் பல மலிக்கா.....

    விரைவில் எனது புதிய பதிவுடன் சந்திப்போம்

    ReplyDelete
  6. என்னங்க ஆச்சு.. ஆளையே காணோம்?? :-)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.